தோசை சுட்டு பரப்புரையில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி..!
கர்நாடகாவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உணவகத்தில் தோசை சுட்டு கட்சியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
மைசூர் பகுதியில் பரப்பரை செய்தவர் அங்கிருந்து உணவகம் ஒன்றின் சமையலறையில் நுழைந்து தோசை தயாரித்தார். இதை தொடர்ந்து சிக்மாவின் ஒரு பகுதியில் பரப்பரை செய்த பிரியங்கா பீடத்திற்கு சென்று வழிபட்டார். அங்குள்ள கோவில் யானையும் அவர் தொட்டு மகிழ்ந்தார்.





