மது மற்றும் கஞ்சா பொருட்களை ஒழித்தால் மட்டுமே சட்ட ஒழுங்கு சீராகும்!
அன்புமணி ராமதாஸ் திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்து அவரது கட்சியினரையும் பொது மக்களையும் சந்தித்து வருகின்றார். மேலும் நேற்று சின்னாளப்பட்டியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு என்பது மிகப்பெரிய கேள்விக்குறியதாக உள்ளது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழகம் முழுவதும் மது விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் என கூறி வருகின்றார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மணல் மாபியா கும்பல் கிராம நிர்வாக அதிகாரியை பட்டப்பகலில் வெட்டி கொலை செய்தது.
இதுபோல தற்போது தமிழகம் முழுவதும் கொலைகள் நடப்பதும், பாலியல் அத்துமீறல் நடப்பதும், சிறுவர் பாலியல் நடப்பதும் அதிகளவு ஆக உள்ளது அதுபோலவே மது விற்பனை, கஞ்சா விற்பனை காவல்துறை உரிய நடவடிக்கை எடுப்பது கிடையாது. யாரையேனும் கைது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு சிலரை கைது செய்து கடைக்கோடியில் விற்பனை செய்யும் நபரை கைது செய்கின்றனர். முக்கிய நபர்களை கைது செய்யவில்லை.
கஞ்சா மட்டும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அதிக அளவு கஞ்சா விற்பனையில் வந்துள்ளது. அதனை தொடர்ந்து கஞ்சா எண்ணெய், கஞ்சா பவுடர், கஞ்சா ஸ்டாம், போன்றவை வந்துள்ளது. இதனை நாக்கில் தடவினால் மிகப்பெரிய போதை ஏற்படுகின்றது என கூறப்படுகின்றது. மேலும் இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து போதை பொருட்கள் அதிக அளவு விற்பனைக்கு வருகின்றது.





