நிர்பயா குற்றவாளி பவன் குப்தாவின் சீராய்வு மனு மீதான விசாரணை வரும் ஆறாம் தேதி நடக்க உள்ளதால் ஏற்கனவே அறிவித்தபடி மார்ச் 3ஆம் தேதி குற்றவாளிகளின் மரண தண்டனை நிறைவேற்றப்படாது என கூறப்படுகிறது. மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் எனக்கூறி பவன் குப்தா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். வரும் 6ஆம் தேதி இது விசாரிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டாலும் அடுத்தகட்டமாக அவன் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அளிப்பான் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் மீது […]
நாட்டு மக்கள் அனைவருக்கும் நீதி கிடைக்கச் செய்வதே அரசின் நோக்கம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்திரபிரதேசத்தில் பிரயாக்ராஜில் மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய மோடி முந்தைய ஆட்சிக் காலத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்குவது அரிதாக இருந்தது என்றும், கடந்த ஐந்து வருட ஆட்சி காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 9,000 நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 130 கோடி மக்களின் வளர்ச்சியில் மத்திய அரசின் பங்கு […]
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதலாவது இன்னிங்சில் இந்தியா 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது . இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா. இதற்கு பதிலடியாக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் மூன்றையும் வென்று இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து . தொடர்ந்து 2 […]
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் திருநங்கைகளின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் விதமாக முதல் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. பிஎல்எஸ் மருத்துவமனையின் வளாகத்தில் திருநங்கைகளுக்காக அண்டர் என்ற பெயரில் மாதத்திற்கு இரண்டு முறை பிரத்யேக மருத்துவமனை செய்யப்படும். அமெரிக்க துணை தூதரகம் மற்றும் பிஎல்எஸ் அரசு மருத்துவமனை இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் பல ஆண்டுகளாக பல்வேறு துன்புறுத்தலுக்கு உள்ளாகி வரும் திருநங்கைகள் மற்றவர்களை போல நல்ல உடல் ஆரோக்கியத்தை பெறமுடியும் என அமெரிக்கத் […]
தேசிய குடியுரிமை சட்ட திருத்தத்தால் எந்த ஒரு இஸ்லாமியரும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் பாரதிய ஜனதா சார்பில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குடியுரிமை சட்டத் திருத்தத்தால் இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் குடியுரிமையை இழப்பார்கள் என்று எதிர்க்கட்சியினர் தவறான தகவலை மக்கள் மத்தியில் பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார். […]
வட கிழக்கு டெல்லியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உண்மையை ஆராய காங்கிரஸ் சார்பில் 5 பேர் கொண்ட குழுவை அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார். முகுல் வாஸ்னிக்,தாரிக் அன்வர்,சுஷ்மிதா தேவ், சாக்ஷிதின், மற்றும் குமாரி செல்ஜா ஆகியோர் அடங்கிய குழுவினர் நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்து விரிவான அறிக்கையை சோனியா காந்தியிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக பொருளாதார வளர்ச்சி கடுமையான வீழ்ச்சியை சந்திக்கும் என ஐஎம்எப் நிறுவனத்தின் தலைவருக்கு ஸ்டாலினால் ஜார்சீவா ஏற்கனவே எச்சரித்திருந்தார். சீனாவை சார்ந்துள்ள நாடுகள் மட்டுமின்றி உலகம் முழுவதும் அச்சுறுத்தலால் ஏற்றுமதி-இறக்குமதி, சுற்றுலாத்துறை, விமானப்போக்குவரத்து, எண்ணெய் தயாரிப்பு என பல்வேறு துறைகளும் ஆட்டம் கண்டுள்ளன. மும்பை பங்கு சந்தையில் இந்திய நிறுவனங்களான டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா, பஜாஜ் பைனான்ஸ், இன்ஃபோசிஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஓஎன்ஜிசி ஆகியவற்றின் பங்குகள் இதுவரை இல்லாத […]
உத்திரபிரதேச மாநிலம் மீரட்டில் இஸ்லாமியர் ஒருவர் தமது மகளின் திருமண அழைப்பிதழில் ஹிந்து கடவுள்களின் படங்களை அச்சிட்டு மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். மீரட் ஹஸ்தினாபூர் பகுதியை சேர்ந்த முகமது என்பவர் நான்காம் தேதி நடக்கும் தனது மகள் அஸ்மாவின் திருமண அழைப்பிதழில் கணபதி மற்றும் ராதை கிருஷ்ணரின் படங்களை அச்சிட்டு உள்ளார். மதத் துவேஷம் சமூகத்தை வேட்டையாடும் வேலையில் இந்து, முஸ்லீம் ஒற்றுமையை வெளிகாட்ட இந்த முயற்சி உதவும் என்பது அவரது நம்பிக்கை. இந்த திருமண […]
நிலவின் மறுபக்கம் யாரறிவார் என்று கூறுகிறது ஒரு தமிழ் சினிமாபாடல். நிலவின் மறுபக்கம் எப்படி இருக்கும் என்பதை ஆராய சீனாவின் சாங்கே 4 விண்வெளித் திட்டம் முயல்கிறது. சாங்கே 4 செயற்கைகோள் நிலவில் கடந்த ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி வேன் கார்மன்கிரேட்டர் மூலம் நிலவில் இறங்கியது. இதன் நோக்கம் தென்துருவ பகுதியான அயர்கின் பேஷினை ஆய்வு செய்வதுதான். இதுதான் நிலவின் அதிகபட்ச தூரமான பகுதியாகும். இப்பகுதியில் பாறைகளும் 39 அடி மண்ணும் இருப்பதை […]