கோடை விடுமுறை முடிவதற்குள் தனியார் பள்ளிகளின் வாகனங்களை முழுமையாக தணிக்கை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், பஸ், வேன்களில் மாணவர்கள் அமரும் இருக்கைகள், அவசரக் கால கதவு, கண்ணாடிகள், மெடிக்கல் கிட், ஓட்டுநர்களின் மருத்துவச் சான்று உள்ளிட்டவற்றை முறையாக ஆராயும் பணிகளில் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள், RTO-க்கள் இறங்கியுள்ளனர்.
இப்பணிகளை இம்மாத இறுதிக்குள் கட்டாயம் முடிக்க அரசு ஆணையிட்டுள்ளது.