பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், காஷ்மீரில் முக்கிய செய்தித்தாள்கள் முதல் பக்கத்தில் கருப்பு நிறத்துடன் செய்திகளை பிரசுரித்திருந்தன.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு அந்த செய்தித்தாள்களில் வன்மையாக எதிர்ப்பு தெரிவித்து கடும் வார்த்தைகளில் தலைப்புகள் வெளியாகி இருந்தன. தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் காஷ்மீர் மக்களின் பேட்டிகளும் அதிகம் இடம் பெற்றிருந்தன.