மகளை அழைத்து வர சென்ற தாய்..எதிர்பாராத நேரத்தில் நடந்த விபத்து..!

திருப்பூரில் மகளை பள்ளியில் இருந்து அழைத்துவர சென்ற தாய் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் அருகே வாவி பாளையத்தை சேர்ந்த சிவகாமி என்பவர் தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார்.

 

அப்பொழுது அம்மன் நகர் பகுதியில் நின்று கொண்டிருந்த நபர் பின்னால் வரும் வாகனத்தை பார்க்காமல் தனது பைக்கை இயக்கினார். இதனால் அவர் தடுமாறி லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.