காலையிலேயே தனது வாக்கை செலுத்திய அன்னியூர் சிவா..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. தேர்தல் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விக்கிரவாண்டி தொகுதியில் 276 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

 

திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா காலையிலேயே வாக்கினை செலுத்தினார். அன்னியூர் சிவா அன்னியூர் மேல்நிலைப் பள்ளியில் குடும்பத்துடன் வந்து வாக்கை செலுத்தினார்.