தங்கச்செயினை பறித்துக் கொண்டு தப்பியோட முயன்ற காவலர்..!

சென்னை ஆவடியில் மளிகை கடைக்கு சென்று பொருட்கள் வாங்குவது போல் நடித்து கடைக்காரரின் கழுத்தில் இருந்த பதினைந்து சவரன் தங்கச்செயினை பறித்துக் கொண்டு தப்பியோட முயன்றதாக கூறி சிறப்பு காவல் துறை காவலர் ஒருவரை பொதுமக்கள் விரட்டி பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்தனர்.