ரயிலில் ஏறும்போது தவறி விழுந்த நபர்..!

கேரளாவில் ரயிலில் ஏறும் பொழுது தவறி விழுந்த நபரை காவலர்கள் மீட்டனர். கண்ணூர் ரயில் நிலையத்திற்கு சென்ற நபர் ஒருவர் ஓடும் ரயிலில் ஏறும் பொழுது தவறி விழுந்துள்ளார்.

 

நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே சிக்கிய நபர் வலியால் அலறி துடிக்க ரயிலும் முன்னோக்கி நகர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கவனித்த காவலர் துரிதமாக செயல்பட்டு அந்த நபரை காப்பாற்றினார். சில நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்பொழுது வெளியாகியுள்ளது.