சுங்கச்சாவடி அறைகளை ஜேசிபியால் உடைத்த இளைஞர்..!

த்தரபிரதேசத்தில் ஜேசிபி மூலம் சுங்கச்சாவடி அறைகளை அடித்து நொறுக்கி விட்டு தப்பிய இளைஞரை திரைப்பட பாணியில் காவல்துறையினர் நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி உள்ளது. அங்கு வந்த ஜேசிபி எந்திரத்திற்கு சுங்கவரி கட்டுமாறு கூறியுள்ளனர்.

 

ஜேசிபி மூலம் சுங்கவரி வசூலிக்கும் இரண்டு மையங்களை உடைத்து நொறுக்கினார். அதை தொடர்ந்து ஜேசிபி உடன் அங்கிருந்து தப்பினார். அவரை பின் தொடர்ந்த காவல்துறையினர் 35 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று திரைப்பட பாணியில் மடக்கிப் பிடித்தனர்.

 

தன்னை துரத்திய வாகனங்களை ஜேசிபியால் மோதி உடைத்த இளைஞரை மடக்கி பிடித்த காவல்துறையினர் அழைத்து வந்தனர். பின்னர் அந்த இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டார். ஜேசிபி மூலம் இளைஞர் நடத்திய தாக்குதல் தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளன.