வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். துறையூர் அடுத்த கண்ணனூரில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அறை எடுத்து தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர்.
மதிய வேளையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த பொழுது இவர்களது அறைக்குள் திடீர் என்று நுழைந்த 10 பேர் கொண்ட கும்பல் கட்டையாலும் ஆயுதங்களாலும் கொடூரமாக தாக்கியது. இதில் சுனில், நரேஷ், ராகுல், ராஜேஷ், மணி உள்ளிட்ட இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர்.
துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர்கள் தங்கள் யாருடனும் சண்டையிட வில்லை எனவும் இதுபோன்ற தாக்குதல் தொடர்ந்தால் மேலும் சொந்த ஊருக்கு செல்ல வேண்டியது தான் எனவும் வேதனையுடன் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள் :
ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய மூதாட்டி..!
மகளிர் உரிமை திட்டம் - ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
வேலூரில் 5 முறை தாழ்வாக பறந்த விமானம்.. மக்கள் அதிர்ச்சி..!
மணி ஹெய்ஸ்ட் முகமூடி அணிந்தபடி பண நோட்டுகளை வீசிய நபர்..!
நடு ரோட்டில் வலியால் துடித்த இளைஞர்களுக்கு உதவிய அமைச்சர்..!
ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் பைக் பயணம் சென்ற முதல்வர்..!