திருப்பதியில் 20 ஆயிரம் பக்தர்கள் தங்கக்கூடிய ஓய்வறை..!

திருப்பதியில் 20 ஆயிரம் பக்தர்கள் தங்கும் வகையில் 600 கோடிகள் அமைக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

 

70 ஆண்டுகள் பழமையான சத்திரங்களை இடித்துவிட்டு அதில் வசதிகளுடன் இவை கட்டப்படும் என்றும் கருணாகரன் தெரிவித்துள்ளார். 25 வயதுக்குட்பட்டவர்கள் கோவிந்தா கோவிந்தா என ஒரு கோடி முறை எழுதி வரும் பட்சத்தில் அவர்களுக்கு குடும்பத்துடன் விஐபி தரிசனம் செய்து வைக்கப்படும் 1116 முறை கோவிந்தா கோவிந்தா என எழுதும் நபருக்கும் விஐபி தரிசனம் செய்து வைக்கப்படும் என்றும் கூறினார்.

 

பாரம்பரிய வழக்கங்களை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.