மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழப்பு..!

ள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே மகன் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழந்தார். காசிநாதன் நேற்று அதிகாலை தனது விவசாய நிலத்திற்கு சென்றார்.

 

அப்போது அவரது நிலையத்திற்கு அருகே பாஸ்கர் என்பவர் சட்டவிரோதமாக அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி காசிநாதன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பாஸ்கர் காசிநாதன் உடலை புதருக்குள் மறைத்து வைத்து தற்கொலை என நாடகமாட முயற்சித்துள்ளார்.

 

ஆனால் திடீரென இரவோடிரவாக மணலூர் பேட்டை காவல் நிலையத்திற்கு சென்ற பாஸ்கர் நடந்ததை கூறி சரணடைந்துள்ளார். முட்புதருக்குள் இருந்த காசிநாதன் உடலை மீட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

காசிநாதன் இறந்ததை அறிந்து அவரது தந்தை சுப்ரமணியம் மாரடைப்பால் உயிரிழந்தார்.


Leave a Reply