தற்போது கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க மேலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது
குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது இதனால் பகல் இரவு என்று முழுநேரமும் மின்விசிறி இன்றி இருக்க முடியாத சூழல் உள்ளனர்.
இந்நிலையில் அறிவிக்கப்படாமல் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.ஊரடங்கு காலத்தில் மக்கள் வீட்டில் இருப்பதால் மின்தடையால் பகல் மட்டுமல்லாமல் இரவு நேரத்திலும் பெறும் அவதிப்படுகின்றனர்.வீட்டில் டி.வி,மின்சாரம் அடுப்பு உள்ளிட்ட எலக்ட்ரிக் பொருட்கள் வீணாகிறது.கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அடிக்கடி மின்தடை ஏற்படாமல்தடுக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இராமநாதபுரம் நகர் பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.