10ம் வகுப்பு மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞர் கைது
கள்ளக்குறிச்சி அருகே பத்தாம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தியாகதுருவம் அருகே சித்தாள் கிராமத்தை சேர்ந்த ஆனந்த் என்பவர் கட்சிராபாளையத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியுடன் பழகி வந்துள்ளார்.
அதனால் கர்ப்பம் அடைந்த நிலையில், இருவரின் பழக்கம் குறித்து தனது பெற்றோரிடம் மாணவி தெரிவித்துள்ளார். அதையடுத்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆனந்தை கைது செய்து அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




