தொண்டையில் போண்டா சிக்கியதால் உயிரிழந்த பெண்

சென்னையில் பெண் ஒருவர் போண்டா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூளைமேடு காமராஜர் நகரைச் சேர்ந்த கங்காதரன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

 

இவரது மனைவி பத்மாவதி கடையில் போண்டா வாங்கி வந்து தமது தாயுடன் சாப்பிட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பத்மாவதியின் தொண்டையில் போண்டா சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றுள்ளனர்.

 

பத்மாவதியை சோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Leave a Reply