சென்னை உயர்நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி இன்று காலை பதவியேற்றுக் கொண்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமாணி ராஜினாமா செய்ததை அடுத்து பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார்.
சென்னையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், ஆளுநர் பன்வாரிலால் ஏ.பி. சாஹிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவரது பதவிக்காலம், 2020ஆம் ஆண்டு டிசம்பர் 31 முடிவடைகிறது.
இந்த விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழக முதல்வர், சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள், உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள் :
ஹேமராஜ்க்கு மாவுக்கட்டு போட்டது போலீஸ்..!
கல்லூரிகளில் மாறிய செமஸ்டர் தேர்வு வினாத்தாள்..மாணவர்கள் அதிர்ச்சி..!
கணவருடன் பேசிக் கொண்டே சென்ற மனைவி.. அடுத்த நொடி நடந்த சம்பவம்..!
அரசு வேலை வாங்கி தருவதாக 24 பேரிடம் ரூ.1 கோடி மோசடி..!
திமுக ஆட்சியை வீழ்த்த துரோகிகள் துணையோடு வந்தாலும் சதியை முறியடிப்போம் - முதல்வர்
அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறுதானியங்கள்: அமைச்சர்