சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித்தருவதாக கூறி பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவத்தில் 14 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் நெல்லூரில் பல இடங்களில் பாலியல் தொழில் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பெண்களை ஏமாற்றி ஒரு கும்பல் பாலியல் தொழிலில் ஈடுபடுவதும் கண்டறியப்பட்டது. இந்நிலையில் கோம்பூர் சேர்ந்த சிறுமி அளித்த புகாரின் பேரில் 6 பெண்கள் உட்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 7 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கார், செல்போன், 12 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் செய்திகள் :
சாக்கடை கால்வாயில் விழுந்த நபர் உயிரிழப்பு..!
தவெகவினருக்கு தலைமை உத்தரவு..!
சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்.. அமித் ஷா கண்டனம்
திருமணத்திற்கு பின் தனது கணவருடன் நெருக்கமாக போட்டோ வெளியிட்ட சீரியல் நடிகை பாவ்னி
புதுச்சேரி அ.தி.மு.க-வினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!
தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்..!