சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித்தருவதாக கூறி பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவத்தில் 14 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் நெல்லூரில் பல இடங்களில் பாலியல் தொழில் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பெண்களை ஏமாற்றி ஒரு கும்பல் பாலியல் தொழிலில் ஈடுபடுவதும் கண்டறியப்பட்டது. இந்நிலையில் கோம்பூர் சேர்ந்த சிறுமி அளித்த புகாரின் பேரில் 6 பெண்கள் உட்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 7 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கார், செல்போன், 12 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் செய்திகள் :
சட்டமன்ற தேர்தல் எதிரொலி - தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்
நெருக்கடி கொடுப்பது பா.ஜ.க-வின் பழக்கம் - த.வெ.க நிர்வாகி நாஞ்சில் சம்பத் ஓபன் டாக்
தி.மு.க சொன்ன தொகுதி எண்ணிக்கையில் ஏற்பு இல்லை - பெ.சண்முகம் பேட்டி
த.வெ.க ஆதரவு வாபஸ் - ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி அதிரடி
அ.தி.மு.கவுக்காக நீங்க ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க? ஸ்டாலினை தாக்கிய அண்ணாமலை
சிலிண்டர் விலை மேலும் ரூ.200 வரை உயர வாய்ப்பு..!






