சபரிமலை பக்தர்களுக்காக சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே

சபரிமலை கோவில் செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

சிறப்பு ரயில்கள், இயக்கப்படும் வழித்தடம், நாள் உள்ளிட்ட விவரங்களுடன் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 

கொல்லம்-காக்கிநாடா (வண்டி எண்:07212) இடையே சிறப்பு கட்டண ரயில் நவ. 17, 21, 25 தேதிகளில் காலை 10 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும். சென்னை சென்டிரல்-கொல்லம்(06065) சிறப்பு ரயில் நவ. 16, 23, 30 ஆம் தேதிகளில் இரவு 8.30 மணிக்கு சென்னையில் இருந்து இயக்கப்படும்.

 

கொல்லம்-ஐதராபாத் (07110) சிறப்பு கட்டண ரயில் நவ. 23, 27 ஆம் தேதி, டிச. 1-ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு கொல்லத்தில் இருந்து செல்லும். சென்னை சென்டிரல்-கொல்லம்(06063) சிறப்பு கட்டண ரயில், நவ. 17, 24 தேதிகளில், மாலை 4.15 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கமாக கொல்லம்-சென்னை சென்டிரல்(06064) சிறப்பு கட்டண ரயில் நவ. 18, 25ஆம் தேதிகளில் மதியம் 3 மணிக்கு கொல்லத்தில் இருந்து இயக்கப்படும்.

 

சென்னை சென்டிரல்-திருவனந்தபுரம்(06047) சிறப்பு கட்டண ரயில் நவ. 21, 28ஆம் தேதிகளில் சென்னையில் இருந்து புறப்படும். கோவை-சந்திரகாச்சி(80824) சிறப்பு கட்டண ரயில் நவ. 8 ஆம் தேதி இரவு 9.45 மணிக்கு கோவையில் இருந்து செல்லும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


Leave a Reply