முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெறும் அளவிற்கு அவரது உடல் நிலை பாதிக்கப்படவில்லை என்று எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது. இதனையடுத்து அவரது இடைக்கால ஜாமின் நிராகரிக்கப்பட்டதால் தொடர்ந்து திகார் சிறையிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். எனவே மருத்துவமனையில் சுகாதாரமான சூழலில் சிகிச்சை பெறவேண்டிய நிலை இருப்பதாக சிதம்பரம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதை விசாரித்த நீதிபதி எய்ம்ஸ் மருத்துவர்களை கொண்டு சிதம்பரத்தை மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.
அவர்களின் அறிக்கையை ஏற்று நீதிபதி சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்தார். அவருக்கு தேவையான கொசுவலை, முக கவசம் உள்ளிட்ட வசதிகளை செய்து தருமாறு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.