தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்பதற்காக நடிகர் அஜீத் டெல்லியில் பயிற்சி பெற்றார். நேர்கொண்டபார்வை திரைப்படத்திற்கு பின்னர் மீண்டும் வினோத் இயக்கத்தில் நடிக்க அஜித் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்திற்காக இளமையான தோற்றத்திற்கு அஜீத் மாறிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
நடிப்பு மட்டுமல்லாது ஆளில்லா விமானங்கள் தயாரிப்பு, துப்பாக்கி சுடுதல், புகைப்படம் எடுப்பது, கார் பந்தயத்தில் ஈடுபடுவது போன்ற திறமைகளையும் பெற்றவர் அஜித். அண்மையில் கோவையில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் அஜீத் கலந்து கொண்டார். அதில் நன்றாக விளையாடியதால் சென்னை டிரைஃபில் சார்பில் 25 மீட்டர் பிரிவில் கலந்து கொண்டார். அந்த போட்டியில் அவர் பெற்ற பிள்ளைகள் தொடர்பான விவரங்கள் இணையதளத்தில் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது மீண்டும் துப்பாக்கிச் சூடுகள் தீவிரமாக செயல்பட தொடங்கியுள்ளார். இந்த முறை தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தயாராகி வருகிறார். இதற்காக டெல்லியில் உள்ள சூட்டிங் மையத்தில் பயிற்சி எடுத்தார். ஒரு வார பயிற்சியை முடித்துவிட்டு அஜித் சென்னை திரும்பியுள்ளார். எனவே விரைவில் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.






