இராமநாதபுரத்தில் பொதுமக்களிடம் கணினி மற்றும் இணைய தள பயன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தமின்னணு நூலகத்தை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் திறந்து வைத்தார்,இராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான்ஊராட்சி சேவை மைய வளாகத்தில் பி.என்.பணிக்கர் அறக்கட்டளையுடன் இணைந்து மின்னணு நூலகத்தை மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் திறந்து வைத்தார். அவர் பேசியதாவது: பிரதமரின் உத்தரவின்படி இந்திய அளவில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் 117 மாவட்டங்களில் இராமநாதபுரமும் ஒன்று.
மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சென்றடையு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேளாண், நீர்ப்பாசனம், பொது சுகாதாரம், கல்வி வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் திறன் மேம்பாடு அடிப்படை உட்கட்டமைப்பு வசதி மேம்பாடு களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியால் பொதுமக்களிடையே கணினி மற்றும் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளது. அரசு நலத்திட்டங்கள் இணைய வழியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பொதுமக்களுக்கு கணினி மற்றும் இணைய பயன்பாடு குறித்து விழிப்புணர்வு மிகவும் அவசியமாகும். ஊரக
பகுதி மக்களிடையே கணினி மற்றும் இணைய பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பி.என். பணிக்கர் அறக்கட்டளையுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் மூலம் பட்டணம்காத்தான் ஊராட்சி சேவை மையத்தில் மின்னணு நூலகம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இம்மின்னணு நூலகத்தில் தற்போது 5 கணினி, 2மடிக்கணினி இணைய வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறை சார்ந்த நூல்கள் மின்னணு வடிவில் கணினிகளில் வைக்கப்பட்டுள்ளன.
இம்மையத்தில் ஊரகப் பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு கணினி மற்றும் இணையதள பயன்பாடு குறித்து பயிற்சி அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளிலும் கிராம ஊராட்சி சேவை மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இம்மையங்கள் மூலம் பொதுமக்கள் அரசு நலத்திட்டங்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். இச்சேவை மையங்கள் அனைத்திலும் இத்தகைய மின்னணு நூலகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊரக பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பெண்கள் அனைவரும் கணினி மற்றும் இணையதள பயன்பாடு குறித்து விழிப்புணர்வு பெற்று பயனடைவர் என்றார்.
பி.என்.பணிக்கர் அறக்கட்டளை துணைத்தலைவர் என்.பாலகோபால்,வேளாண்மைத்துறை இணை இயக்குநர் எல்.சொர்ணமாணிக்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எஸ்.எஸ்.சேக் அப்துல்லா, ஊராட்சிகளின் உதவி இயக்குநர்வீ.கேசவதாசன் உட்பட அரசு அலுவலர்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.