சமரச குழுவில் இணைய மாட்டோம் என இந்துக்கள் தரப்பில் மறுப்பு

உச்சநீதிமன்றத்தில் அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான விசாரணையை வரும் 18ம் தேதிக்குள் முடிக்க கெடு விதிக்கப்பட்ட நிலையில் எது ஹிந்து முஸ்லிம்களிடையே சமரசம் செய்ய நியமிக்கப்பட்ட குழுவில் இணைய மாட்டோம் என இந்துக்கள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிஎஸ் வைத்தியநாதன் நீதிபதிகளிடம் கருத்து தெரிவித்தார் .

 

சமரசம் செய்ய 3 நபர் குழுவை நியமித்துள்ளது உச்ச நீதிமன்றம் அதை தொடர்ந்து இயங்க அனுமதி அளித்ததை அடுத்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக 14 மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் ஆகியுள்ளன 2.77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்று பிரிவினருக்கும் சரிசமமாக பங்கிட்டு தரும்படி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

சமரச குழுவினருக்கு இந்துக்கள் தரப்பில் மிகக் குறைந்த அளவே ஆதரவு காணப்படுகிறது. இந்நிலையில் தினசரி விசாரணையை தொடங்கி உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன குழு விபரங்களை பதிவு செய்து வருகிறது.


Leave a Reply