சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்துவதாக திருப்பதி செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இன்று அதிகாலை பத்துக்கும் மேற்பட்டோர் செம்மரங்களை கடத்த முயன்றதாக கூறப்படுகிறது. அவர்களை தடுத்த போது போலீசார் மீது கற்களை வீசி தாக்க முயன்றனர்.
இதனால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் செம்மரங்களை அங்கேயே போட்டு விட்டு அனைவரும் தப்பியோடிய நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர்கள் விட்டுச் சென்ற 6 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் மீது கற்களை வீசி தாக்கியதால் தற்காப்பு கருவி வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
மேலும் செய்திகள் :
விஜய் உடன் பாமக கூட்டு!? திரைமறைவில் நடக்கும் ரகசிய பேச்சு! துணை முதல்வர் கனவில் அன்புமணி..!
மதுரை மத்திய சிறை கைதிகள் 3 பேர் மீது வழக்கு..!
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
காவல் நிலையத்தில் வெடி விபத்து.. 7 பேர் உயிரிழப்பு..!
மேற்கு வங்கத்திலும் காட்டாட்சி வேரோடு அகற்றப்படும் - மோடி
அண்ணா பல்கலை. முறைகேடு - 17 பேர் மீது வழக்குப்பதிவு..!






