மதுரையில் மறுமணம் செய்து கொண்ட பெண்ணை வெட்டிக் கொல்ல முயன்ற முதல் கணவரின் சகோதரர்கள் உள்ளிட்ட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சிம்மக்கல் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி அவரது கணவர் முத்துக்குமார் கடந்த ஓராண்டிற்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கௌதம் என்பவரை மகேஸ்வரி இரண்டாவதாக மறுமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் வீட்டின் முன்பு மகேஸ்வரி நின்று கொண்டிருந்தார். அப்போது முதல் அவர் முத்துக்குமாரின் அண்ணன் குமார் 4 பேர் அங்கு வந்துள்ளனர். பின்னர் முத்துக்குமார் இறந்து சில மாதங்களே ஆகும் நிலையில் உனக்கு இரண்டாவது திருமணம் தேவையா என தெரிவித்து மகேஸ்வரியை நான்கு பேரும் ஓட ஓட வெட்டினர்.
பின்பு நான்கு பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அரிவாளால் வெட்டப்பட்ட இதில் பலத்த காயம் அடைந்த மகேஷ்வரி மதுரை இராசாசி அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குமார் உள்ளிட்ட 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.