9 ஆம் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் வாலிபருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை இராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் துரத்தியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் மகன் பாலமுருகன்,27. இவர் கூலித்தொழிலாளி . இவர் கடந்த 29.2.2016 அன்று 9-ம் வகுப்பு படித்து வந்த, 14 வயது மாணவியை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
மாணவியின் புகாரில், பரமக்குடி மகளிர் போலீசார், பாலமுருகனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கில் பாலமுருகனுக்கு, மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் நான்கு ஆண்டு சிறைத்தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும் செய்திகள் :
சிவகங்கையில் 50க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல்..!
மீண்டும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறும் குஷ்பூ..!
இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு சிக்கிய இளைஞர்..!
டியூஷன் சென்டரில் 6 வயது சிறுமியை கடத்திய மர்ம கும்பல்..!
நான் மன்னிப்பு கேட்கவில்லை மரணித்து விடு என தான் கூறினேன் : மன்சூர் அலிகான்
தர்மபுரி - சேலம் சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த சொகுசு பேருந்து..!