விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கடும் மழையையும் பொருட்படுத்தாமல் போக்குவரத்து காவலர் ஒருவர் முழு ஈடுபாட்டுடன் பணியில் ஈடுபட்டு அப்பகுதி மக்களின் பாராட்டை பெற்றுள்ளார். அருப்புக்கோட்டை பகுதியில் மாலை வெப்பச்சலனம் காரணமாக பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது அருப்புக்கோட்டை தூத்துக்குடி சாலையில் உள்ள எம்எஸ் கார்னர் சந்திப்பில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் செல்வகுமார் என்பவர் மழையால் வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் இருப்பதற்காக கடும் மழையையும் பொருட்படுத்தாமல் போக்குவரத்து பணிகள் துரிதமாக ஈடுபட்டார்.
எம்எஸ் கார்னர் சந்திப்பு என்பது இந்த பகுதியில் அதிகமாக வாகனங்கள் செல்லும் சாலையில் முக்கியமான பகுதி என்பதால் இவர் மேற்கொண்ட இந்த பணியை பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேலும் நேற்று இவர் பணியில் ஈடுபட்டிருந்த வீடியோவை அப்பகுதி இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.