காலி பிளாஸ்டிக் பாட்டில்களை வழங்கினால் 5 ரூபாய் பரிசு வழங்கும் புதிய திட்டத்தை நீலகிரி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உதகை நகராட்சிக்கு உட்பட்ட ஐந்து இடங்களில் பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த இயந்திரத்திற்குள் பிளாஸ்டிக் பாட்டில்களை போடும்போது சிறு துகள்களாக மாற்றப்பட்டு அளிக்கப்படுகிறது. பேடிஎம் வாடிக்கையாளர்கள் இந்த இயந்திரத்திற்குள் பிளாஸ்டிக் பாட்டில்களை செலுத்திவிட்டு தனது செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். இதனை எடுத்து அவர்களுக்கு ஐந்து ரூபாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.