19-ந் தேதி லாரிகள் வேலைநிறுத்தம்!

அகில இந்திய அளவிலான லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு அளித்துள்ளது. சேலத்தில் நடைபெற்ற மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 71வது மகா சபை கூட்டத்தில் மோட்டார் வாகன சட்டம் மூலம் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் அதற்கான தீர்வுகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

 

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத் தால் கடுமையான அபராதம் விதிக்கப்பட்டதாக லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் வரும் 19-ஆம் தேதி நடைபெறும் லாரிகள் வேலை நிறுத்தத்திற்கு தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு அளிப்பதாக அவர் தெரிவித்தார்.


Leave a Reply