தெலுங்கானா மாநில ஆளுநராக பதவி ஏற்றிருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் அடுத்த 15 நாட்களுக்குள் தெலுங்கு மொழியை கற்ற மாநில மக்களுடன் சரளமாக உரையாட போவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். தெலுங்கானா ஆளுநராக கடந்த ஞாயிற்றுக்கிழமை பாதையை வகுத்துக் கொண்ட தமிழிசை ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை சந்தித்து பேசினார்.
அனைவரிடமும் நட்பாக பழக எண்ணம் கொண்டிருப்பதாகவும், அதேசமயம் அதிகாரிகள் கடமைகளை சரிவர செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். நாள்தோறும் தான் யோகா செய்து வருவது போல ஆளுநர் மாளிகையின் ஊழியர்களும் யோகா செய்து உடல் நலத்தை பேணி காக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஆளுநராக பதவி ஏற்பதற்கு முன்பு தெலுங்கானாவின் சமூக பொருளாதார பிரச்சனைகள் குறித்து தான் தெரிந்து கொண்டதாகவும் அதன் அடிப்படையில் தனது பணி இருக்கும் என்றும் அவர் கூறினார்.