மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்துக்கு 25 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் அதிகமாக திறக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

தற்போது மேட்டூர் அணைக்கான நீர் மட்டம் வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியிலிருந்து 65 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்திறப்பு 89.67 டி‌எம்‌சி ஆக உள்ளது. 120 அடி கொண்ட மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது 117.59 அடியாக உள்ளது. இதனை அடுத்து மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்திற்கு 25 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது.


Leave a Reply