மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி உபரிநிதி வழங்க ஆர்.பி.ஐ முடிவு

ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள உபரி நிதியில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கு வழங்க முடிவு செய்திருக்கிறது. மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் இயக்குனர்கள் குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டது.

 

முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் நிபுணர்கள் அளித்த பரிந்துரைப்படி, இந்த முடிவை ரிசர்வ் வங்கி எடுத்திருக்கிறது, பல்வேறு கணக்கின்படி தற்போது ரிசர்வ் வங்கியிடம் ஒன்பது லட்சம் கோடி ரூபாய் உபரி நிதி இருப்பதாக தெரிகிறது. சர்வதேச அளவில் மத்திய வங்கிகள் தம்மிடம் உள்ள ஒவ்வொரு நிதியில் ஒரு பகுதியை அந்தந்த அரசுக்கு வழங்கும் நிலை இந்தியாவிலும் வர வேண்டும் என மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டது.

ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரி நிதியில் எந்தளவுக்கு அரசுக்கு வழங்கலாம் என்று முடிவெடுப்பதற்கு முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநரின் தலைமையில் கடந்த டிசம்பர் மாதம் நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கடந்த வெள்ளிக்கிழமை தனது அறிக்கையை ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்திருந்தது.

 

மத்திய அரசு ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் இருந்த நிலையில், தற்போது கிடைக்கவிருக்கும் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி மிகப்பெரிய வருவாயாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அரசின் நிதி பற்றாக்குறை கணிசமாக குறைவதுடன் அதிகளவிலான நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி தனது கல்வியை மத்திய அரசுக்கு வழங்குவது தொடர்பாக கடந்த ஆண்டு சர்ச்சை ஏற்பட்டது.


Leave a Reply