கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை முயற்சித்து வருகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு காட்டு யானைகள் 20 நாட்களுக்கும் மேலாக சுற்றிவருகிறது.
அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட முதுமலையில் இருந்து பரணி, மாரியப்பன் என்ற இரு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்ததால் காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.
அதன் காரணமாக வெளியிலிருக்கும் யானைகளை திறந்த வெளிக்கு கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கால்நடை மருத்துவரின் மேற்பார்வையில் யானைகளுக்கு மயக்க ஊசி செலுத்த வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகள் :
திருவாடானை அருகே கோவிலில் லட்சார்ச்னை! ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்!
மின்சாரம் தாக்கி டைல்ஸ் தொழிலாளி பலி.. போலீஸ் விசாரணை..!
வார விடுமுறை.. நாளை முதல் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு..!
ஸ்டாலின் சமரசம்.. நோட்டீஸை வாபஸ் பெற தயாநிதி முடிவு..!
மழைநீரில் விழுந்த செல்போன்.. உருண்ட இளைஞர்..!
செயின் பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை..!