விருதுநகரில் எரியும் மெழுகுவர்த்தியுடன் கூடிய கண்ணாடி டம்ளரை தலையில் வைத்து கீழே விழாமல் யோகாசனம் செய்த பள்ளி மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார். விருதுநகர் தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருபவர் சக்தி ஷிவானி. யோக மீது ஆர்வம் கொண்டுள்ள இச்சிறுமி எரியும் மெழுகுவர்த்தியுடன் கூடிய கண்ணாடி டம்ளரை தலையில் வைத்து 50 யோகாசனங்களை 4 நிமிடம் 20வினாடிகளில் செய்து அசத்தினர்.
இந்த சாதனையை நோபல் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் என்ற அமைப்பு அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது.
மெழுகுவர்த்தியுடன் கூடிய கண்ணாடி டம்ளரை தலையில் வைத்து யோகாசனம் செய்து மாணவி சாதனை
