சேலத்தில் மது வாங்கும் போது ஏற்பட்ட தகராறின் போது 30 ரூபாய்க்காக இளைஞர் அடித்து கொல்லபட்ட சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் அம்மா பேட்டை அருகே உள்ள சதீஷ் வீட்டின் அருகே சட்ட விரோதமாக மது விற்ற திலீப் குமாரிடம் மது பாட்டில் வாங்கியுள்ளார்.அப்போது சதீஷ் 30 ரூபாய் குறைவாக கொடுத்ததாக தெரிகிறது.இதனால் ஏற்பட்ட தகராறின் போது சதீஷ் அடித்து கொல்லபட்டு உயிரிழந்துவிட்டார். இதனால் ஆவேசம் அடைந்த உறவினர்கள் சேலம் ஆத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறை சமாதானம் செய்து வைத்தனர். இதற்கு காரணமானவர்களை கைது செய்வதாக போலீசார் உறுதி கூறியதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
மேலும் செய்திகள் :
கருப்பு நிற சேலையில் கலக்கும் நடிகை அஞ்சு குரியன்..!
கோவை மாநகராட்சி வரி உயர்வை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் - எஸ்.பி. வேலுமணி
கோவைக்கு கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம் - கோவை கலெக்டர்
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!
பள்ளிகள் திறப்பு: ஸ்பெஷல் பஸ்கள் இயக்க திட்டம்..!
பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்!