காட்டு யானை தாக்கி பள்ளி மாணவி உயிரிழப்பு.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அருகே உள்ள நவமலை பதி மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர் ராஜீ.இவரது மனைவி சித்ரா. இவர்களின் 7 வயது மகள் ரஞ்சனா (எ) ரஞ்சனி அங்குள்ள அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார்.தாய் சித்ரா மகள் ரஞ்சனியை அழைத்து கொண்டு பொள்ளாச்சி சென்று விட்டு பேருந்தில் நவமலை சென்றனர்.பேருந்து நின்றவுடன் இறங்கி இருவரும் வீட்டிற்கு நடந்து சென்று சென்று கொண்டிருந்தனர்.

 

அப்போது, வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானை இருவரையும் துரத்தியது. அலறியடித்து ஒடிய சிறுமி ரஞ்சனாவை யானை தாக்கியது. சித்ரா கதறி அழுது கூச்சல் சத்தம் கேட்ட அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்ததபோது யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. பின்னர், படுகாயமடைந்த சிறுமியை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

காட்டு யானை தாக்கி தாய் கண்முன்னே யானை தாக்கி மகள் இறந்த சம்பவம் அப்பகுதி மலைவாழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இறந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோட்டூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.


Leave a Reply