தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது, உள்கர்நாடகா முதல், கன்னியாகுமரி வரை காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. இது மேலும் வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தை நோக்கி வலுவான காற்று வீசக்கூடிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று பல இடங்களில் மழை பெய்தது. நேற்று இரவு கோவையில் மழை பெய்தது. அதேபோல் சேலம், பொள்ளாச்சி, திருப்பூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது. காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக, திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களின் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் செய்திகள் :
நடிகை ப்ரீத்தி முகுந்தன் அழகிய போட்டோஷூட்..!
அரசு மருத்துவமனையிலேயே ஒரு தாயின் மடியில் இருந்து குழந்தை பறிபோகும் அவலம்: விஜய் கண்டனம்
பின்னால் வந்த வாகனம் மோதல்..சம்பவ இடத்திலே பலி..!
கோவையில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி..!
நயினார் நாகேந்திரன் எல்லாம் ஒரு ஆளா? செங்கோட்டையன் பதிலடி
நயினாரை நாகேந்திரன் விமர்சனம்: பா.ஜ.க பெண் தலைவர்கள் மவுனம் காப்பது அநீதி - கனிமொழி என்.வி.என்.சோமு






