--- --:--:-- --

அமேதி தொகுதில் மனு தாக்கல் செய்தார் ராகுல்! திறந்த வாகனத்தில் 3 கி.மீ. ஆரவாரமாக ஊர்வலம்

Ragul Nomination

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

 

நாட்டின் 17-வது மக்களவைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தில் உள்ள அமேதி மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு ஆகிய இரணு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில், வயநாடு தொகுதியில் கடந்த 4ஆ ம் தேதி ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.

 

இந்நிலையில், அமேதி தொகுதியில் போட்டியிடுவதற்காக அவர், இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா காந்தி, மைத்துனர் ராபர்ட் வதேரா ஆகியோர் இருந்தனர்.

 

முன்னதாக, அமேதியின் முன்ஷிகன்ஜ்-தர்பிபூர் முதல் கௌரிகஞ்ச் வரை 3 கி.மீ.தொலைவிற்கு திறந்த வாகனத்தில் ராகுல் ஊர்வலமாக வந்தார். அமேதி தொகுதியில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி  நிறுத்தப்பட்டுள்ளார். அமேதி தொகுதியில், மே 6ஆம் தேதி தேர்த்ல வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon